Sunday, March 6, 2011

கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை

மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன் மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார். உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் கிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அவதூறு என இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்-குர்ஆன் மிகத்தெளிவாகவே எச்சரிக்கிறது.
இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இவ் விஷயத்தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.  அல்-குர்ஆன் (4 : 157)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.  அல்-குர்ஆன் (4 : 158)
குர்ஆனுடைய உண்மை விளக்கத்தின்படி சுருங்கக்கூறினால் THERE WAS NO CRUCIFIXION, SO NO CHRISTIANITY அதாவது ஏசு சிலுவையில் மரணிக்கவில்லை, கிருஸ்தவம் என்பதும் இல்லை. இதை முஸ்லிம்களாகிய நாம் குர்ஆனிலிருந்து விளக்கினால் கிருஸ்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா?. எனவேதான் ஏசு சிலுவையில் மரணித்தார் என்பது உண்மையல்ல கற்பனை, கிருஸ்தவமே ஒரு மாயை என்பதை பைபிளிலிருந்தே சுட்டிக்காட்டுகிறோம் - இன்ஷா அல்லாஹ்.
கிருஸ்தவ நண்பர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆக்கத்தை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் not to take things for granted.' - but "PROVE ALL THINGS!" (1 Thessalonians 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். (தெசலோனிக்கேயர் 5:21) என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ அன்பர்களும் எங்கள் மீது கோபப்படாமல் சங்கைக்குரிய ஏசுபிரான் சிலுவையில் உயிர்நீத்தாரா? கிருத்தவ மதம் உண்மையா? என்ற சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
யோனாவின் அற்புதமே ஏசுவின் அற்புதம்.
ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் தீனுஸ் இஸ்லாம் என்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்களாகிய யூதர்களிடம் பிரச்சாரம் செய்தபோது யூதர்கள் தொடர்ந்து மறுத்தனர். நபி ஏசு (அலை) அவர்கள் இறைகட்டளைபடி பல அற்புதங்களை செய்துகாட்டியும் அந்த யூதர்கள் நபி ஏசு (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ஒரு அத்தாட்சியை, அற்புதத்தை நபி ஏசு (அலை) அவர்களிடம் கேட்டனர். இதை மத்தேயு தான் எழுதிய சுவிசேஷத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"MASTER, WE WOULD SEE A SIGN FROM THEE". (Matthew 12:38).
அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். (மத்தேயு 12:38)
இதைக் கேட்ட ஏசு அவர்கள் கோபத்துடன் ஒரு பதிலைக் கூறியதாக பைபில் கூறுகிறது. அது என்ன பதில் கீழே பார்வையிடுங்கள்.
"AN EVIL AND ADULTEROUS GENERATION SEEKETH AFTER A SIGN; AND THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS: FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH." (Matthew 12:39-40).
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.  (மத்தேயு 12:39-40).
இதில் மூன்று விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும்.
1) விபச்சார சந்ததியார் என்று ஏசு கோபப்படும் அளவிற்கு அந்த யூதர்கள் மோசமான முறையில் நடந்திருக்கவேண்டும். (இன்று இணையங்களில் இஸ்லாத்தைத் தூற்றுபவர்களைக் கூட நாம் இவ்வாறு பழிக்கவில்லை). காரணம் யூதர்கள் இறைச் செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் இறைத்தூதர்களைப் புறக்கணித்ததாலும், இறைத்தூதர்களை கொலை செய்ததாலும், இறை வேதங்களில் தங்கள் சுய கருத்துக்களை புகுத்தி அதில் கலப்படம் செய்ததினாலேயே ஏசுவால் இவ்வாறு பழிக்கப்பட்டனர். (அன்று ஏசுவால் பழிக்கப்பட்ட யூதர்கள் இன்று கிருஸ்தவர்களுக்கு நெருங்கிய கூட்டாளிகள் என்பது வேறுவிஷயம்).
2) ஏசுவிடம் யூதர்கள் அத்தாட்சியைக் கேட்டபோது நான் பிறவிக்குருடை போக்கவில்லையா? தண்ணீரை மதுவாக மாற்றிக்காட்டவில்லையா? (யோவான் 2:9) என்றெல்லாம் அவர்களிடம் வினா எழுப்பவில்லை. மாறாக யோனாவின் அத்தாட்சி மட்டுமே என்னுடைய அற்புதம்/அத்தாட்சி என்று ஏசு ஒரே வரியில் பதில் சொல்கிறார். THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை.
3) யோனாவின் அத்தாட்சியே என்னுடைய அத்தாட்சி என்ற இந்த வார்த்தையை வைத்துக்கொண்டுதான், ஏசு உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர் நீத்தார், பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மூன்று நாட்கள் மரணத்திற்குப் பிறகு அதிசய உயிர்த்தெழுந்ததின் காரணமாக ஏசு யோனாவைப் போன்றவர் ஆகிறார் என்று ஏசுவின் சிலுவை மரணத்தை கிருத்துவர்கள் நிறுவுகின்றனர். ஏசு யோனாவைப் போன்றவரா? ஏசு சிலுவையில் உயர்நீத்தாரா? என்பதை பார்ப்போம்.
அது என்ன யோனாவின் அற்புதம்?
யோனா என்ற நபி யூனுஸ் (அலை) அவர்களின் அத்தாட்சியை பற்றி விளங்குவதற்கு முன்னால். பைபிள் கூறும் நபி யோனா (அலை)அவர்களின் சரித்திரத்தை நினைவு கூறவேண்டும். இச்சரித்திரங்கள் ஒவ்வொரு முஸ்லிம், கிருஸ்தவ மற்றும் யூதக்குழந்தைகளுக்கும் தெரியும். அதுதான் JONAH ON THE WHALE  மீன் வயிற்றில் தீர்க்கதரிசி யோனா.
இறைவன் நபி யோனா (அலை) அவர்களை நினேவா (அல்லது நினிவா) நகரை நோக்கி இறைப்பிரச்சாரப் பணி செய்யுமாறும், நினேவா நகர் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாரும் கட்டளையிட்டான். ஆனால் நபி யோனா (அலை)அவர்களோ, இறைகட்டளைபடி நினேவா நகருக்கு செல்லாமல் ஜாப்பா என்ற ஊருக்கு படகில் பயணம் சென்றார்கள்.
அவ்வாறு நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது கடல் கொந்தளிக்கின்றது. அன்றைய மீனவர்களின் மூடநம்பிக்கைபடி இறைவனுக்கு குற்றமிழைத்த நிலையில் எவரும் கடல்பிரயாணம் செய்தால் கடல் கொந்தளிக்கும் என்று நம்பினர். அப்படி கடல் கொந்தளிக்கும் போது அந்த குற்றவாளியை கடலில் வீசி எறியவில்லையெனில் கடல் அலையின் சீற்றத்தால் அப்படகில் பிரயாணம் செய்யும் அனைவரும் அழிவர் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும். மக்களோடு மக்களாக ஜாப்பா நோக்கி நபி யோனா (அலை)அவர்கள் பிரயாணம் செய்த அந்த நாளிலும் அவ்வாறு கடல் கொந்தளித்தது. எனவே படகிலிருந்த அம்மீனவர்கள் குற்றமிழைத்தவரை கண்டுபிடிக்கும் முறையாக அவர்கள் நம்பியிருந்த (LOT SYSTEM )  சீட்டுக்குலுக்கள் முறைப்படி (அல்லது பகடைமுறைப்படி) சீட்டுப்போடவே, நபி யோனா (அலை)அவர்களின் பெயரே வந்தது.
“THAT WE MAY KNOW FOR WHOSE CAUSE THIS EVIL IS UPON US. SO THEY CAST LOTS, AND THE LOT FELL UPON JONAH." (Jonah 1:7).
அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.  (யோனா 1:7)
"AND HE SAID UNTO THEM TAKE ME UP, AND CAST ME FORTH INTO THE SEA; SO SHALL THE SEA BE CALM UNTO YOU: FOR I KNOW THAT FOR MY SAKE THIS GREAT TEMPEST IS UPON YOU." (Jonah 1:12)
அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும் என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.  (யோனா 1:12)
நபி யோனா (அலை)அவர்களும் தானே குற்றவாளி என்றும், இறைகட்டளைக்கு மாறுசெய்துவிட்டேன் என்றும் ஒப்புக்கொண்டு நடுக்கடலில் குதிக்க தயாரானார்கள். அவ்வாறு நடுக்கடலில் போடப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை ஒரு மிகப்பெரும் மீன் விழுங்கியது. மூன்று நாட்கள் மீன் வயிற்றில் உயிரோடு தங்கிய நபி யோனா (அலை)அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடினார்கள். பின்னர் அந்த திமிங்கலம் மீன் நபி யோனா (அலை)அவர்களை கடற்கரையில் உயிரோடு உமிழ்ந்தது. இதுதான் நபி யோனா (அலை)அவர்களின் மூன்றுநாட்கள் மீன்வயிற்றில் உயிரோடு தங்கிய அற்புத சரித்திரம்.
யோன உயிரோடிருந்தார்களா? மரணித்தார்களா?
இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் நபி யோனா (அலை)அவர்கள் தங்களின் குற்றத்தை தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டபடியால் மீனவர்கள் அவர்களின் கைகால்களை கட்டி துன்புறுத்தி குற்றுயிராக்கி கடலில் வீசி எறியவில்லை. மாறாக எந்த நிலையில் படகில் ஏறினார்களோ அதே உடல் நலத்துடனே கடலில் எறிப்படுகிறார்கள். அவ்வாறு கடலில் போடப்படும் போது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
அவ்வாறு வீசப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை அந்த மீன் முழுமையாக விழுங்கியது. மீனுக்கு ஒரு இரை கிடைத்தால் பற்களால் கடித்து குதறி விழுங்கும். அம்மீன் நபி யோனா (அலை)அவர்களை அவ்வாறு செய்யவில்லை. காரணம் அவ்வாறு கடித்து குதறி நபி யோனா (அலை)அவர்கள் மரணித்திருந்தால் அதற்குப் பெயர் அற்புதமல்ல. எனவே அம்மீன் இறைக் கட்டளைபடி நபி யோனா (அலை)அவர்களை முழுவதுமாக விழுங்கியது. இப்போது நாம் கேட்கிறோம், இவ்வாறு அந்த மீன் விழுங்கும் நிலையில் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
"JONAH PRAYED UNTO THE LORD HIS GOD OUT OF THE FISH'S BELLY?" (Jonah 2:1).  அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: (யோனா 2:1). இவ்வாறு மீனால் விழுங்கப்பட்ட நபி யோனா (அலை)அவர்கள் மூன்று நாட்கள் மீன் வயிற்றில் தங்கினார்கள். இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ததாக மேற்கண்ட பைபிள் வசனம் கூறுகிறது. மரணமடைந்து விட்ட ஒரு மனிதன், இறைவனிடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது தன்னுடைய குற்றத்தை வருந்தி அழுது புலம்பத்தான் இயலுமா? இப்போது சொல்லுங்கள் மீன் வயிற்றில் மூன்று நாட்கள் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
மூன்றாம் நாள் அந்த மீன் இறைக்கட்டளை படி நபி யோனா (அலை) அவர்களை கடற்கரையில் உமிழ்ந்தது. அவ்வாறு உமிழ்ந்தபோது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
இவ்வாறு நபி யோனா (அலை) அவர் அந்த மூன்னு நாட்களும் Alive! Alive!! Alive!!!  உயிரோடு இருந்தார்கள்! உயிரோடு இருந்தார்கள்!! உயிரோடு இருந்தார்கள்!!! என்பது இவ்வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தெரியும்.

யோனாவைப் போல் ஏசு இல்லை
கிருஸ்தவ நண்பர்களே இப்போது சற்று சிந்தியுங்கள் "AS JONAH WAS ..... SO SHALL THE SON OF MAN BE" LIKE JONAH  யோனா இருந்தததைப் போல்...மனுஷகுமாரனாகிய நானும் அதாவது யோனாவைப் போல என்று ஏசு கூறியதாக பைபிள் கூறுகிறது.
1. தீர்க்கதரிசி யோனா அவர்கள் படகிலிருந்து தூக்கி கடலில் இறக்கப்பட்டபோது அவர் உயிரோடு இருந்தார்.
2. மீன் யோனாவை விழுங்கியயோதும் அவர் உயிரோடே இருந்தார்.
3. மூன்று நாட்கள் யோனா மீன் வயிற்றில் இருந்தபோதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
4. மீன் அவரை கடற்கரையில் உமிழ்ந்த போதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
ஆனால் கிருஸ்தவர்களின் நம்பிக்கையைப் பாருங்கள். சங்கைக்குரிய தீர்க்கதரிசி ஏசுவை யூதர்கள் பிடித்து சிலுவையில் அறைந்ததாகவும், அவர் உலக மக்களின் பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் உயிர்நீத்தாகவும் கிருஸ்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மரணித்த ஏசு மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிருஸ்தவர்களின் நம்பிக்கை.
தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் உயிருடன் இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. யோனாவைப் போலத்தான் ஏசுவும் என்றும் கூறுகிறது. ஆனால் தீர்க்கதரிசி ஏசுவோ 3 நாட்கள் மரணித்துவிட்டதாக கிருஸ்தவர்கள் சொல்கிறார்கள். இந்த முரண்பாட்டின் மூலம் ஏசு, யோனாவைப் போல் அல்ல என்று நிரூபனமாகிவிட்டது. ஏசு, யோனாவைப் போல இல்லை என்று ஒப்புக்கொள்வதைத் தவிர இங்கு வேறு வழியுமில்லை. எனவே கிருஸ்தவர்கள் ஏசு உண்மை தீர்க்கதரிசி இல்லை என்ற முடிவிற்கு வரவேண்டும் அல்லது ஏசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு நிலையில் எதை ஒப்புக்கொண்டாலும் கிருஸ்தவம் என்பது ஒரு மாயை, ஏசுவின் சிலுவை மரணம் நடைபெறவில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகும். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் 4:157,158 வசனங்களில் தெளிவு படுத்துகிறது.
கிருஸ்தவர்கள் தேவகுமாரராக நம்பிக் கொண்டிருக்கும் ஏசு, யோனாவைப் போல இல்லை என்ற உண்மை கிருஸ்தவ மத கோட்பாட்டிற்கும், கிருஸ்தவ திருச்சபைகளுக்கும் விழுந்த பேரடியாக இருப்பதால், இதற்கு ஏதாவது சப்பைக் கட்டுகட்டி, பூசி மெழுகி, ஏசு சிலுவையில் மரணித்தார் என்பதை நிரூபிப்பதற்காக கிருத்தவச் திருச்சபைகள் சில குறுக்கு வழியை யோசித்தனர். அதன்படி மத்தேயு 12:39-40 வசனங்களை (வழக்கம்போல) திரித்தனர்.
FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH இதில் THREE என்று நான்கு முறை வந்துள்ளது எனவே 'மத்தேயு 12:39-40 வசனங்கள் ஏசு, யோனாவைப் போல் என்ற கருத்தைப் போதிக்கவில்லை மாறாக TIME FACTOR அது மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்கின்றனர். அதாவது தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (sepulcher) இருந்தார் என்று கூறுகிறார்கள். இதிலும் கிருஸ்தவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது.

ஏசு மூன்று நாட்களா பிணஅறையில் இருந்தார்?
பைபிளை படித்த கிருஸ்தவ நண்பர்களிடம் ஏசு சிலுவையில் அறையப்பட்டது எப்போது? எந்தக்கிழமையில்? என்று வினவுங்கள். அது வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னர் என்பார்கள். நியூஜிலாந்திலிருந்து அமெரிக்காவரை, ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா வரை அனைத்து கிருஸ்த்தவ நாடுகளும் ஒத்துக்கொண்ட ஒரு விஷயம்;. அதனால்தான் ஈஸ்டர் பண்டிகை என்ற GOOD FRIDAY  புனித வெள்ளியை கிருஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
சரி அப்படி சிலுவையில் மரணமடைந்த ஏசு எப்போது உயிர்த்தெழுந்தார் எனக் கேட்டால் மூன்றாம் நாள் ஞாயிறு காலை சூரியன் உதிக்கும்முன் என்று பதிலளிப்பர். காரணம் ஞாயிற்றுக் கிழமை (வாரத்தின் முதல் நாள்) சூரியன் உதயமாகும் முன் மேரிமெக்டலின் ஏசு வைக்கப்பட்டிருந்த பிணஅறையை (Tomb) பார்த்தார், பிணஅறை (Tomb) காலியாக இருந்தது.  We must not forget that the Gospels are explicit in telling us that it was "before sunrise" on Sunday morning (the FIRST day of the week), that Mary Magdalene went to the tomb of Jesus and found it empty.
யூதர்களின் நம்பிக்கைபடி பாவம் செய்தவர்களையும், குற்றம் இழைத்தவர்களையும் சிலுவையிலேற்றிக் கொள்வர். காரணம் அந்த பாவி மரண வேதனையை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்பதற்காக. சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் உடலிலிருந்து குருதிகள் அனைத்தும் வெளியேறி உயிர் பிறிவதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரங்களாவது ஆகும். யூதர்களின் பார்வையில் அன்று ஏசு சாபத்திற்குள்ளானவர். அடுத்தநாள் சனிக்கிழமை யூதர்களின் புனித நாளாக இருந்ததால் வெள்ளிக்கிழமை மாலையே அவசர அவசரமாக ஏசு சிலுவையில் அறையப்படுகிறார்.
எனினும் கிருத்துவர்களின் நம்பிக்கைப்படி ஏசுவின் உடல் மூன்று நாட்கள் பிண அறையில் (வழஅடி) இருந்ததா என்பதை பார்ப்போம்.
ஈஸ்டர் வாரம்

பிணஅறையில் ஏசுவின் உடல் இருந்த கால அளவு
 
காலை
இரவு
வெள்ளிக் கிழமை மாலை (சூரியன் மறையும்முன்)
இல்லை
ஒரு இரவு

சனிக்கிழமை (பிணஅறையில் இருந்திருக்கலாம்)
ஒரு பகல்
ஒரு இரவு
ஞாயிற்றுக் கிழமை (சூரியன் உதிக்கம் முன் உடல் காணவில்லை)
இல்லை
இல்லை
மொத்தம்
ஒரு பகல் இரண்டு இரவுகள்
 
வெள்ளிக்கிழமை மாலைதான் (சூரியன் மறையும் முன்னர்) ஏசு சிலுவையில் அறையப்படுகிறார் எனவே வெள்ளிக்கிழமை காலை அவர் உடல் பிணஅறையில் இருந்ததற்கு சாத்தியமில்லை. அன்று வெள்ளி இரவு பிணஅறையில் அவர் உடல் இருந்திருக்கலாம்.
அடுத்தநாள் சனிக்கிழமை காலையும், அன்று இரவும் ஏசுவின் உடல் பிணஅறையில் இருந்திருக்கலாம்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரியன் உதயமாவதற்கு முன்னர் மேரிமெக்டலின் பிணஅறையைப் பார்த்தார் அதுகாலியாக இருந்தது. எனவே இது வரை ஒரு பகலும் இரண்டு இரவுகளும் பிண அறையில் ஏசுவின் உடல் இருந்திருக்கிறது.
இந்நிலையில் தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (Tomb) இருந்தார் என கிருத்துவ திருச்சபைகள் அப்பாவி கிருஸ்தவர்களின் காதில் பூசுற்றியது என்னாயிற்று?
JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY;  யோனா 3 பகலும் 3 இரவுகளும் மீன்வயிற்றில் இருந்தார். ஆனால் ஏசுவோ 1 பகலும் 2 இரவுகள் மட்டும்தானே பிணஅறையில் (வழஅடி) இருந்துள்ளார்? 3 பகல் 3 இரவுகளும், 1 பகல் 2 இரவுகளும் சமமாகுமா?
IS 3+3  and  1+2 are equal ?
3 +3 ம்,  1 +2 ம்  சமமாகுமா?
அணுவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ அல்லது கணிதமேதை இராமானுஜமோ வந்தால்கூட இதை சமப்படுத்தி காட்ட இயலாது.
எனவே யோனாவைப் போல ஏசு உயிரோடு இருக்கவில்லை என்று முன்னர் நிரூபனமாகியதைப் போல, இப்போது (TIME FACTOR) மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்று கூற்றும் பொய்யாகி விட்டது.
இதை உணர்ந்து கொண்ட ராபர்ட் பஹே என்ற கிருஸ்தவ அறிஞர் ஏசு வெள்ளியன்று சிலுவையில் அறையப்படவில்லை மாறாக புதன் கிழமைதான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும் என்றார். இதை டர்பன் (South Africa-Durban)  நகரிலுள்ள ஹோலிடே இன் (Holiday Inn) நட்சத்திர ஹோட்டலில் கருந்தரங்கமாக நடத்தியது மட்டுமல்லாது இக்கருத்தை ப்லைன் ட்ரூத் (Plain Truth)  இதழிலும் வெளியிட்டார். காரணம் வெள்ளிக் கிழமையிலிருந்து கணக்கிட்டால் 3 பகல் 3 இரவுகள் வரவில்லை என்பதால் அவர் புதன் இரவிலிருந்து கணக்கிடச் சொன்னார்.
என்ன விளையாட்டு இது? கடந்த 2000 வருடங்களாக புனித வெள்ளி, புனித வெள்ளி என்று கூப்பாடு போடுவது வெற்றுக்கூச்சலா என்று கேட்கத் தோன்றுகிறது. பைபிள் பழைய ஏற்பாட்டின் 300க்கும் மேற்பட்ட தூத்துச் செய்திகள் ஏசு சிலவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்றுதான் பரிபூரனமானது என்ற கிருத்தவ நம்பிக்கை என்ன ஆயிற்று? இவ்வுலகின் 200 கோடி கிருஸ்தவர்களும் தங்கள் மதத்தின் அஸ்திவாரமாக நம்பும் தங்கள் கடவுளின் சிலுவை மரணத்தைப் பற்றிய 2000 வருடங்கள் அறியாமையை வெளிக்கொண்டு வந்ததற்கு ராபர்ட் பஹே அவர்களை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். அறிஞர் ராபர்ட் பஹேயின் ஆய்வின்படி புனித வெள்ளி என்பதல்ல புனித புதன் என்பதே கிருத்துவர்களின் புனித நாள். ஈஸ்டர் பண்டிகை, புனித வெள்ளி என்று கிருஸ்தவர்களை கடந்த 2000 வருடங்களாக சைத்தான் வழிகெடுத்து விட்டானா?
ஆகையால் மக்களே! கிருஸ்தவர்கள் யாரை தேவகுமாரன் என்று நினைத்துக் கொண்டும், அவர் சிலுவையில் மரணித்தார் என்றும் நம்புகிறார்களோ அவருக்கும் அல்லாஹ்வின் சங்கை மிக்க இறைத்தூதர்களின் ஒருவரான ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஏசு என்ற ஈஸா (அலை) அவர்கள் இறைவனோ அல்லது தேவகுமாரரோ அல்ல மாறாக இறைவனின் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களை எவரும் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அந்த யூதர்களுக்கு நபி ஈஸா (அலை) அவர்களைப் போன்ற ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. அல்லாஹ் அவர்களை தன் அளவில் உயர்த்திக் கொண்டான். இதுவே சத்தியமான உண்மை. இதை விசுவாசங்கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தகுதியான ஒரே கடவுளாகவும், நபி முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும், பரிசுத்த குர்ஆனை இறைவனின் இறுதி வேதமாகவும் நம்பி, தூய இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாததுவரை எந்த கிருஸ்தவருக்கும் பரலோக ராஜ்யத்தில் வெற்றியுமில்லை, ஈடேற்றமுமில்லை. கிருஸ்தவ நண்பர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
நன்றி :இஸ்லாமிய இணைய பேரவை

Saturday, March 5, 2011

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...II


அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)...


அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு பிந்தைய முஸ்லிம்களின் வரலாற்றை சென்ற பதிவில் பார்த்தோம்..

இன்ஷா அல்லாஹ், கொலம்பஸ்சுக்கு முந்தைய வரலாற்றை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்...

கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகள் (சுமார் 600 ஆண்டுகளுக்கு) முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்க பகுதிகளை அடைந்திருக்கின்றனர்.

வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களின்படி நமக்கு கிடைக்கக்கூடிய முதல் தகவல், 

1. க்ஹஷ்க்ஹஷ் இப்ன் சையித் இப்ன் அஸ்வாத் அல் குர்துபி (khash khash ibn said ibn aswad al-qurtuby) என்பவர் தன் ஆட்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் (Muslim Andalusia, the current spain) உள்ள பலோஸ் (Port Palos) துறைமுகத்தில் இருந்து மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டு, இன்றைக்கு கரீபிய தீவுகள் இருக்கக்கூடிய நிலப்பகுதியை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர் "தெரியாத நிலம்" (The Unknown Land). அதுமட்டுமல்லாமல், தான் சென்ற வழியை வைத்து ஒரு வரைப்படத்தையும் தயாரித்து கொண்டார். அங்கிருந்து வரும்போது ஸ்பெயினிற்கு பெரும் பொருள்களையும் கொண்டு வந்தார். இது அப்போதைய ஸ்பெயின் மக்கள் மிக நன்றாக அறிந்த செய்தி. 

ஆக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிற தகவலின்படி அமெரிக்க பகுதிகளை முஸ்லிம்கள் முதன்முதலில் அடைந்தது 889 இல். 



2. அதன்பிறகு பிப்ரவரி 999 இல், முஸ்லிம் அண்டளுசியாவின் கிரனடா பகுதியை சேர்ந்த இப்ன் பாரூக் (ibn Farukh) என்பவர் தற்போதைய ஸ்பெயினில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து அட்லாண்டிக் கடலை கடந்து இரண்டு தீவுகளை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர்கள், காப்ரரியா (Capraria) மற்றும் ப்ளுஈடினா (Pluitina) என்பதாகும். அதே ஆண்டு மே மாதம் அவர் ஸ்பெயின் திரும்பினார்.

3. பனிரெண்டாம் நூற்றாண்டின்   முற்பகுதியில், வரலாற்றில் மிக மிக பிரபலமான அல்-இத்ரீசி (Al-Idrisi) என்பவர், எட்டு நபர்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் இருந்து மேற்கில் பயணம் செய்து கரீபிய தீவுக்கூட்டங்களை அடைந்தார். அங்கு இந்தியன்ஸ்சிடம் (பூர்வீக குடிமக்கள்) மாட்டிக்கொண்டனர். 



இங்கு சிறிது நேரம் நிறுத்தி, அல்-இத்ரீசி என்பவர் யார் என்று பார்ப்பது மிக அவசியம். இவர் ஒரு மிகச்சிறந்த கடல்வழி ஆராச்சியாளர், பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டவர். சிசிலி (இந்த சிசிலி இத்தாலியில் உள்ளது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது, மத்திய தரைக்கடலில் மிகப்பெரிய தீவு இதுதான்) அரசருக்கு ஆலோசகராகவும் இருந்தவர். இவர் வரைந்த உலகவரைப்படத்தை தான் கொலம்பஸ் தன் பயணத்தில் பயன்படுத்தினார். 

பதிவிற்கு செல்வோம், மேற்கிந்திய தீவுக்கூட்டங்களில் இந்தியன்ஸ்சிடம் இவரும் இவரது ஆட்களும் மாட்டிக்கொண்டனர். அப்போது இவர்களுக்கும் இந்தியன்ஸ்களுக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தது ஒரு இந்தியன்.

என்ன? ஒரு இந்தியன் இவ்விருவருக்கும் மொழிப்பெயர்ப்பாளராக இருந்தாரா?, அதாவது ஒரு இந்தியனுக்கு அரபி தெரிந்திருந்ததா? அரபி கற்றுக்கொள்ளும் அளவிற்கிற்கு அவருக்கு முஸ்லிம்களுடன் தொடர்பிருந்ததா?  ஆம் உண்மைதான். அவர்தான் அல்-இத்ரீசிகும் அவரது ஆட்களுக்கு விடுதலை வாங்கித்கொடுத்தார். இது மிக தெளிவாகவே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. 

ஆக நாம் மேலே கண்ட மூன்று பயணங்களும் முஸ்லிம் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டவை.

இதன்பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய தகவல், 1291 இல் மொரோக்கோவில் இருந்து ஷேக் ஜைனடீன் அலி மேற்கில் அட்லாண்டிக் கடலை கடந்து "புது உலகை" அடைந்தார் என்பது. புது உலகா? இப்படிதான் வரலாறு அந்த நிலங்களை குறிப்பிடுகின்றது.  

இதெல்லாம் விட சுவாரசியமான தகவல், மாலி (Mali, a muslim country situated in north africa) நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பாகும். மாலியின் மேன்டிங்கோ (Mandingo) அரசின் மன்னரான அபு-புகாரி (Abu-Bhukari), 1310 இல் இரண்டு படைகளை சுமார் 2200 கப்பல்களுடன் மேற்குலகில் புதிய நிலங்களை கண்டுபிடிக்க அனுப்பினார். இவர்களும் தற்போதைய அமெரிக்க நிலத்திற்கு வந்து சேர்ந்தனர். 


இன்றளவும் தெற்கு அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகள் (southern american Indian tribe) இந்த மேன்டிங்கோ வடிவங்களை (Mandingo idiograms) கொண்டு   எழுதுகின்றனர். அதுபோல வட அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகளும் மேன்டே மொழியின்  (மேடிங்கோக்களின் மொழி) வார்த்தைகளை பயன்படுத்துக்கின்றனர். ஆக மாலியில் இருந்து வந்த முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்த மக்களுடன் தங்கிவிட்டனர். அந்த புது நிலங்களில தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர். 

ஆக கொலம்பஸ் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அங்கு வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் வரைப்படத்தை (Map) 1513 இல் வரைந்தவர் துருக்கியின் பிரி முஹீத் டின் ரீஸ் (Piri Muhyid Din Re'is), துருக்கி கடற்படையின் தளபதியாக இருந்தவர். கடல் வழி ஆராச்சியாளரும் கூட.  அவர் வரைந்து துருக்கி சுல்தான் செலீம் I (Selim I) னிடம் சமர்ப்பித்து விட்டார். கொலம்பஸ் அப்போது அமெரிக்காவிற்கு வந்து விட்ட போதும், அந்த வரைப்படத்தில் இருந்த அமெரிக்க பகுதிகள் கொலம்பஸ்சினால் கண்டுபிடிக்க படாதவை. மிக தெளிவாகவே அவை வரையப்பட்டிருந்தன. ஆக அந்த தளபதிக்கு அமெரிக்காவின் நிலப்பரப்பை பற்றிய தெளிவான பார்வை இருந்திருக்கிறது.                          இது வியப்பான தகவல்... 

இன்னும் பல ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம், பதிவின் நீளம் கருதி அவை விடப்படுகின்றன.

ஆக கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்களுடனான அமெரிக்க தொடர்பு மறுக்கமுடியாதது. ஆனால் இந்த தகவல்களெல்லாம் சிறிது காலத்திற்கு முன் வரை வெளிவரவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக கூறப்படும் ஒரு காரணம், இந்த தகவல்கள் பெரும்பாலும் அரபி மொழியில் இருந்ததுதான் (மேடிங்கோவை தவிர்த்து).      

எவ்வளவு நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? கடந்த சிலபல வருடங்களாக இந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. 

அல்லாஹ் அமெரிக்கர்களை கொண்டே இந்த உண்மையை வெளிக்கொண்டுவந்துவிட்டான். ஆம் இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவர்கள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்கர்கள். 

அதில் ஒருவர் அரேபிய குதிரைகளை பற்றி ஆராய அரபி கற்று, பின்னர் அந்த அரபி அறிவை வைத்து குரானை கற்க, வியந்து போய் முஸ்லிமாக மாறியவர். பின்னர் தன் அரபி அறிவை கொண்டு பழங்கால அரபி நூல்களை புரட்ட வியப்பின் மேல் வியப்பு. முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்துவிட்டார். 

Dr.ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald F.Dirks) தான் அவர். இவரைப்போன்றவர்கள் வெளிக்கொண்டுவந்த உண்மைகள் யாராலும் மறுக்கமுடியாதவை.    

ஆக அல்லாஹ் அமெரிக்கர்களை வைத்தே உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்...

அமெரிக்காவின் வரலாற்று செய்திகளை மாற்றப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இன்ஷா அல்லாஹ்..மாற்றப்படும்...  

அதெல்லாம் சரி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக படித்திருக்கிறோமே?இதற்கு முன் பத்தியை மறுபடியும் படித்துக்கொள்ள வேண்டியதுதான்...   

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. More about Al-idrisi - clarklabsdotorg
5. Muslims discovered America long before Columbus - Mathaba news agency.
Sincere thanks to:
1. Br.Eddie of thedeenshowdotcom
நன்றி எதிர்க்குரல்

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...I


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது. 

மேற்கொண்டு பதிவிற்கு...

முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.

ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.


இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் "மொரிஸ்கோஸ்" (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.

ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம்  மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).

கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.

உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும், அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?

கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria)  தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் "பின்சோன் சகோதரர்கள்" (The Pinson or Pinzone brothers), அவர்களில்

1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.

இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño).கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.

ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில்  மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.

1492 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தார்.


சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.

இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.

இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தது, இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.

ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.

இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும். அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  


அதற்கு அடுத்த வருடம், 1493 இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.

இம்முறை அவர் இறங்கியது ப்புர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன... காலனி ஆதிக்கந்தான்.  ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.

அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து மக்கள் அடிமைகளாகவும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.    

ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.

இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.

அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆக,      
  • அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
  • பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
  • அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்  (1776-1789).
  • அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).  
  • அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).

இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல "முஸ்லிம் லடினோஸ்" (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.    

ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.

கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?

இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.

கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?

இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.
          
இன்ஷா அல்லாஹ்...தொடரும்...
நன்றி: எதிர்க்குரல்

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

எழுத்து விவாதங்களில் நம் முன்னால் வைக்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் பெரிய அளவில் சிரமம் இருக்காதென்றாலும் (அல்ஹம்துலில்லாஹ்) பல சமயங்களில் நமக்கெல்லாம் தோன்றுவது, 

சரி, இதையெல்லாம் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்? 

இணைய தளங்களில் அதிகம் உலா வருபவர் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இவர்கள் எங்கிருந்து இந்த கேள்விகளை கொண்டு வருகிறார்கள் என்று... 

பெரும்பாலான கேள்விகள் கீழ்காணும் ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட தளங்களாக தான் இருக்கும்,

  • a
  • j
  • f
  • t
  • d        

இந்த தளங்களில் வெளியாகும் தகவல்கள் பல, மனோத்தத்துவ ரீதியாக பாதிப்பை உண்டாக்குவதையே குறிக்கோளாய் கொண்டவை. உள்ளே உள்ள விஷயங்கள் என்றால் ஒன்றும் பெரிதாக இருக்காது. 

உதாரணத்துக்கு, ஒரு பதிவு துவங்கும் போதே இப்படி துவங்கும், "நிச்சயம் இந்த பதிவை முஸ்லிம்கள் படித்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள்" 

இதை படித்த உடனே சில முஸ்லிம்களுக்கு மனதில் ஒரு சிறு சலசலப்பு உண்டாகிவிடும். பின்னர் அவர்கள் அந்த பதிவை படிக்கும் போது, ஒரு வேலை இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகிவிடும். 

வேறு சில பதிவுகள் இன்னும் தமாசாக இருக்கும், அதாவது, "இந்த பதிவிற்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல முடியாது அல்லது பதில் இருக்காது" என்று தொடங்குவார்கள் அல்லது முடிப்பார்கள். 

இது போன்ற பதிவுகளிலும் விஷயம் பெரிதாக இருக்காது, முன்னரே கேட்கப்பட்ட கேள்விகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் ஒன்று, இந்த தளங்கள் முஸ்லிம்களுக்கு பெரும் உதவி புரிகின்றன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் இவற்றுக்கு பதில் தேடுவதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம், அவர்களுடைய உண்மை முகங்களும் தெரிய வரும், நம் ஈமானும் அதிகரிக்கும்...அல்ஹம்துலில்லாஹ்...

ஆக, நான் கூறிக்கொள்ள விரும்புவதல்லாம், இஸ்லாத்திற்கெதிராக சிலர் கொண்டுவரும் விமர்சனங்களை முடிந்தவரை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டாம் என்பதுதான். 

இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும், நான் பார்த்தவரையில்     இஸ்லாத்திற்க்கெதிரான வாதங்களுக்கு பதிலளிக்கும் பெரும்பாலான நம் சகோதரர்கள் மிகுந்த விவேகத்துடன் வாதங்களை கையாள்கிறார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.     

நான் சொன்ன இரண்டாவது சிறு உதவி இங்கேதான். நான் மேலே சொன்ன தளங்களின் வாதங்களை நம் சகோதரர்கள் எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டுமானால் கீழ்க்காணும் தளங்களை பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கெதிரான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் இந்த தளங்களில் பெறலாம்...இன்ஷா அல்லாஹ்...


இவை எனக்கு தெரிந்த, குறித்து வைத்த தளங்கள். இதுபோல ஏராளமான தளங்கள் இருப்பதாகவே தெரிகிறது. உங்களுக்கு இதுபோன்ற தளங்கள் தெரியுமானால் கமெண்ட் பகுதியில் தெரியப்படுத்தலாம். உபயோகமாக இருக்கும்..இன்ஷா அல்லாஹ்...
 .



சமீபகாலமாக, தமிழ் வலையுலகில் சிலர்,  Ibn Warraq அவர்களுடைய "Why I am not a Muslim (1995)" என்ற புத்தகத்தை பயன்படுத்தி எழுதி வருகின்றனர். இது ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அந்த புத்தகத்தின் தரம் அப்படி. எது எப்படியிருந்தாலும் சரி, அந்த புத்தகத்தின் அபத்தமான வாதங்களை அம்பலப்படுத்த பல இஸ்லாமிய தளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு...


நான் சமீபத்தில் பார்த்த ஒரு தளம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தளத்தை நடத்துபவர்கள் தங்களை அடையாள படுத்திக்கொள்ள விரும்பவில்லை, தாங்கள் ஆணா பெண்ணா என்பது உட்பட...அவர்களுக்கு பெயர் உண்டு, ஆனால் அந்த பெயரை வைத்து நாம் எதையும் யூகிக்க முடியாது. 

அந்த தளம்...http://www.loonwatch.com/ 

சரி அவர்கள் யாராயிருந்தால் நமக்கென்ன? அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் என்ன என்பதுதான் முக்கியம். 

அவர்களுடைய நோக்கம், இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதில் சொல்லுவது. 

இஸ்லாத்திற்கெதிராக செயல்பட்டு பிரபலமாக உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கி, அவர்களது கருத்துக்களுக்கு பதில் கூறுவது. 



நான் மேல குறிப்பிட்ட இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களின் தலையாய குரு யாரென்றால், ராபர்ட் ஸ்பென்சர் (Robert Spencer) என்பவர்தான். இவர் தான் 'J' என்று தொடங்கும் தளத்தை நடத்துபவர், அதுபட்டுமல்லாமல் இவரது உதவியை/வாதங்களை மற்ற தளங்களும் நிறையவே பயன்படுத்தி கொள்ளும்.

இவரது நூல்களை/கருத்துக்களை அம்பலப்படுத்தி இவரை சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது இந்த தளம். அதுமட்டுமல்லாமல், ராபர்ட் ஸ்பென்சரை எழுத்து விவாதத்துக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.                

நான் மேல குறிப்பிட்டுள்ள முஸ்லிம்களுடைய தளங்கள் ராபர்ட் ஸ்பென்சருடைய வாதங்களுக்கு தெள்ளத்தெளிவாக பதிலளித்து வந்தாலும், இவர்கள் செய்வது சிறிது வித்தியாசமானது. ஏனென்றால் இவர்களுடைய வாதங்களில் நகைச்சுவை ததும்பும். 

ஆக, உங்கள் முன் யாராவது ராபர்ட் ஸ்பென்சருடைய புத்தகங்களை/கருத்துக்களை முன்வைத்தால் நீங்கள் இவர்களுடைய தளத்தையும் ஆவணச்செய்யலாம்.        

இந்த தளத்தில் நான் மிகவும் ரசித்த இரு பதிவுகள்... 
  • All terrorists are Muslims...except the 94% that aren't...
  • Fathima Bary needs to read her Bible...  


நிச்சயமாக உங்களிடம் நீங்கள் கேள்விப்படாத வித்தியாசமான ஒரு கருத்தை நம் முஸ்லிமல்லாத சில சகோதரர்கள் முன்வைத்தால் அவை பெரும்பாலும் இந்த Anti-Islam தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். அந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க நாம் மேலே பார்த்த இஸ்லாமிய தளங்கள் உதவியாய் இருக்கும், இன்ஷா அல்லாஹ்... 

ஆக, இந்த பதிவின் மூலமாக நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான், 

இஸ்லாத்திற்கெதிராக கேள்விகள் வைக்கப்படும்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மால் சுலபமாக பதிலளித்து விட முடியும் (இன்ஷா அல்லாஹ்). அப்படி அதில் சிரமமிருந்தால் நாம் மேலே பார்த்த தளங்களை நீங்கள் பரிசீலனை செய்யலாம் என்பதுதான். 

என்னதான் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் அதிகளவில் வைக்கப்பட்டாலும், இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. இஸ்லாத்திற்க்கெதிரான அவர்களது திட்டங்கள்/சூழ்ச்சிகள் பலிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்வதில் மிகச் சிறந்தவன் ஆவான் --- Qur'an 3:54      
 And they planned and Allah too planned, and Allah is the best of planners --- Qur'an 3:54

குரானின் இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது சிலரை நினைத்தால்...

முடிப்பதற்கு முன் ஒரு சிறு யோசனை. இது விதண்டாவாதம் புரியும் சில முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது. 

நான் நினைப்பதுண்டு, அவர்கள் மட்டும்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? 

நம்மிடம் கேள்வி கேட்கும் பெரும்பாலானோர், நாம் தவறான கொள்கையில் இருப்பதாகவும், அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதாகவும் நினைத்துதானே நம்மிடம் இஸ்லாத்தை பற்றி கேட்கின்றனர், வாதம் புரிகின்றனர்?

நம்முடைய நிலையும் அதுதானே?, அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதாக தானே நாமும் நினைக்கிறோம்?

ஆக,விவாதம் என்று வரும்போது, நம் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை அவர்களும், அவர்கள் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை நாமும் ஏன் கேட்கக்கூடாது? அவர்கள் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும்,

  • மற்ற மதங்களை சேர்ந்தவர்களாக,
  • நாத்திகர்களாக,
  • இறைவன் இருக்கிறான், ஆனால் மதங்களை/மார்க்கங்களை நம்ப மாட்டோம் என்று சொல்லுபவர்களாக,

என்று யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு கேள்வி நீங்கள், ஒரு கேள்வி நான் என்று ஏன் உடன்பாடு வைத்துக்கொள்ள கூடாது?

அவர்களிடம் பதிலில்லையென்றால் அவர்களை புண்படுத்தாமல் அடுத்த கேள்விக்கு சென்று விட வேண்டியதுதான்.

இது இஸ்லாத்தை பற்றி உண்மையிலேயே அறிந்து கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கு பொருந்தாது. விதண்டாவாதம் புரிபவர்களுக்கு மட்டுமே.  

இது என் தனிப்பட்ட கருத்து. மாற்றுக் கருத்து உடையவர்கள் தங்கள் கருத்துக்களை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்...


இறைவன் நம் எல்லோரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;
என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும்,நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170        

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....
நன்றி: எதிர்க்குரல்

ஏசுவை கொச்சைப் படுத்தும் பைபிள்

இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் - பைபிள்
இயேசுவை பைபிளில் மத்தேயுவும் லூக்காவும் இழிவுபடுத்தியுள்ளனர். எவ்வாறெனில் இயேசுவின் சந்ததிப்பட்டியல் என்று பட்டியல் ஒன்றை பைபிளில் சொல்லியிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் இடம்பெறும் சிலர் 'அவ்வளவு பரிசுத்தமானவர்கள்! அதை விளக்குவதற்கு முன்னால் பைபிளின் பின்வரும் போதனையை நினைவில் கொள்க!

விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது; அவனுக்கு பத்தாம் தலைமுறையாவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது. (உபாகமம் 23:22,3)

எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலேயே இயேசு பிறந்தார் எனவும் அதே பைபிள் கூறுகின்றது.

யூதா, பேரேஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பேரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். (மத் 1:3)

இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் 'தாமார்” என்பவள் இடம் பெறுகிறாள். இதில் கூறப்படும்
'தாமார்” என்பவள் யார்?
"யூதா" என்பவன் யார்? 
"பேரேஸ்” என்பவன் யார்?

இந்தத் தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள். (மகனுடைய மனைவி) அவளுடன் அவர் கள்ளத் தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரே பேரேஸ் என்பவர். இதனை நாம் சொல்லவில்லை; பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 38:6 முதல் 38:29 வரை பார்க்க)

விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த மாமனார், மருமகள் சந்ததியில் -அந்த விபச்சாரத்தில் பிறந்த பேரேஸ் என்பவருடைய பரம்பரையில்- இயேசு பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.

மேலே நாம் நினைவூட்டிய போதனையின்படி விபச்சாரச் சந்ததியில் தோன்றியவர் கர்த்தரின் சபைக்கு வரலாகாது. அப்படியானால் இயேசுவும் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது. அவர் இறைவனின் குமாரர் என்பதும் மற்றவரின் பாவங்களை அவர் சுமந்து கொண்டார் என்பதும் இந்த வம்சாவழிப் பட்டியலின்படி அடிபட்டுப்போய் விடும். கர்த்தர் தனது சபைக்கு இத்தகையவரை நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார். (நாம் இயேசுவைப் பற்றி அப்படிக் கூறவில்லை. பைபிள் அப்படிச் சொல்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றோம்)

தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்(மத்; 1:6)

இவர்களும் இயேசுவின் முன்னோர்களாகக் கூறப்படுகின்றனர். தாவீது ராஜா இன்னொருவரின் மனைவியிடத்தில் சாலொமோனைப் பெற்றதாகப் பச்சையாக மத்தேயு ஒப்புக் கொள்கிறார். இயேசுவுக்கு இதை விட அநியாயம் வேறு என்ன இருக்க முடியும்?

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது'மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னிகொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர் ஓல்லா, தங்கையின் பெயர் ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும் ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன. ஓல்லா என்னுடையவளாய் இருந்தும், விபச்சாரியானாள்; அசீரியர்ள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்;ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள். அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடல்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள். ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே-அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்- அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாலால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.

அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும் தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள். இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும்மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள். கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள்.பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள். இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம்மனம்இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்;

அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும்அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர்உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடிஉன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்... (எசக்கியேல் 23-ஆம் அதிகாரம்)

தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார் வரும் போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன்கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர் அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார் வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்;பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல, அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார்தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர் என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார் என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடுஅவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான். (இரண்டாம் சாமுவேல் 13:1-15 )

சாலொமோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். (மத் 1:5
என்றும் வம்சாவழிப் பட்டியல் கூறுகின்றது.
இந்த ராகாப் யார்?
அவள் ஒரு விபச்சாரி என்று பைபிள் (யோசுவா 2:2) கூறுகின்றது. இந்த வம்சாவழியில் பிறந்ததாகக் கூறுவது ஏசுவுக்குப் பெருமை சேர்க்குமா? கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே சிந்திக்க மாட்டீர்களா?