Friday, June 4, 2010

"சுன்னத் ஜமாத்தினர் தவிர இங்கு தொழுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை" இது நாம் தொழுகைக்காக செல்லக்கூடிய அனைத்து பள்ளி வாசல்களிலும் காணக்கூடிய ஒரு வாசகம் இது.இங்கு எழக்கூடிய ஒரு சந்தேகம் சுன்னத் ஜமாஅத் யார் என்பதே..!இவ்வாறு சொல்லக்கூடியவர்கலுக்கு இந்த தகுதி உள்ளதா என்று சற்று சிந்தனை செய்பவர்கள் வரக்குடிய ஒரே முடிவு ௦.௦௦% இல்லை என்பதே.இவர்கள் மார்க்கம் என்று செய்யக்கூடிய அனைத்து செயல்களும் வழிகெட்ட ஷியாக்களின் கொள்கைகளை அப்படியே பிரதிபலிக்கும் கொள்கைகளை கொண்டவர்கள்தாம் இந்த கொள்கை பிடிப்புமிக்க இந்த கொள்கை சிங்கங்கள்.இவர்களால் பக்தியோடு செய்யப்படும் பூரியான் பாத்தியா,நாற்பது மற்றும் வருஷ கத்தங்கள்,மவ்லூது,ராத்திபு,பாவத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த தரீக்காக்கள்,முரீது,தட்டு,தாயத்து,ஜின்னை வசப்படுதியதாக விடும் புருடாக்கள்,பேய் ஓட்டும் சடங்குகள் மற்றும் பல அனாச்சாரங்கள் அனைத்தையும் வழிகெட்ட ஷியாக்களிடம் இருந்து இறக்குமதி செய்து விட்டு,குரான் மற்றும் சுன்னா மட்டுமே வாழ்க்கையின் அடிப்படியாக அமைத்துக்கொண்டவர்களுக்கு இவர்கள் தரும் இடையூறு கொஞ்ச நஞ்சமல்ல. .இப்படிப்பட்ட இந்த கொள்கை வாதிகள் தாம் குரானையும்,சுன்னாவையும் மட்டுமே தம் வணக்கவலிபாடுகளிலும்,வாழ்கையின் அனைத்து நிலைகளிலும் அமைத்துக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ்வின் எச்சரிக்கையை தெரிந்தோ,தெரியாமலோ பள்ளியை விட்டு தடுக்கும் மாபெரும் பாவத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.இவர்கள் தாம் "அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாதினராம்"
பாக்கர் என்கின்ற தனி மனிதனுக்காக துவங்கப்பட தௌஹீத் போர்வை போர்த்திய அந்த அமைப்பில் உள்ள "அகில உலக தௌஹீத் வாதிகள் "தௌஹீத்ஜமாத்தில் இருந்து விரட்டப் பட்ட உடன் தங்களது உண்மை சுயரூபத்தைக் கட்டத் தொடங்கி உள்ளனர்.இன்று தமிழகத்தில் ஒரு சிலர் நாங்களும் தௌஹீத்வாதிகள் தாம், எங்களது இயக்கமும்,நாங்கள் இருக்கக் கூடிய அமைப்புகளும் தௌஹீதை மட்டுமே போதிக்கின்றன என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.அனால் தமிழகத்தில் "தௌஹீத் ஜமாத்தை" தவிர வேறு எந்த அமைப்புகளும் மக்கள் மத்தியில் அல்லாஹ்வின் மார்கத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளை போதிப்பதில் இந்த ஜமாத்திற்கு நிகர் எந்த அமைப்பும் இல்லை என்பதை அறுதி இட்டுக் கூறமுடியும்.அந்த தனி நபருக்காக துவங்கப் பட்ட அந்த தனி நபர் அமைப்பினரின் செயல்பாடுகள் மிகவும் கீழ்த்தரமான செயல்பாடுகளால் தங்களையே மிகவும் மக்கள் மத்தியில் கேவலப்படுத்திக் கொண்டுள்ளனர்.மிகவும் கிழ்த்தரமான தனிநபர் அவதூறும்,தவ்ஹீத்ஜமாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வும் அவர்களை தவ்ஹீதை விட்டே தடம் புரளச் செய்துள்ளது.சில அறிவாளிகள் இஸ்லாம் என்றாலே தவ்ஹீத் தானே என்று மடமையால் உளறிக் கொட்டுபர்களும் அவர்களில் உள்ளனர்.நாம் போதிக்கும் தௌஹீத் தூதர் காட்டிய குரான் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.தற்போது இந்த அறிவிலிகள் பலமுறை இந்த ஜமாதிற்கும் அதன் தாயிகளுக்கும் எதிராக பல சூழ்ச்சிகளும்,இடையூறுகளும் செய்த மற்றும் செய்து கொண்டு இருக்கின்ற அசிங்கங்களுடன் கை கோர்த்து எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்த அசிங்கங்கள் தாம் இந்த அறிவிலிகளால் கடுமையாக எதிர்க்கப் பட்டும் விமர்சிக்கப் பட்டவர்கள்.அந்த சந்தர்ப்பவாதிகளுக்கும்,இந்த சுயநலவாதிகளின் கூட்டணி எத்தகியது என்பதை நாம் விளக்க தேவை இல்லை.நாங்கள் 5000 குரான்கள் வழங்கி உள்ளோம் என்று பெருமை அடிக்கும் பெருமைவாதிகளே ஷிர்க்கை எதிர்த்தும்,பித்தத்தை எதிர்த்தும் எத்தனை பொதுக்கூட்டங்கள் ...?நடத்தி உள்ளீர்கள் அல்லது ஒரு துண்டுப் பிரசுரமாவது வெளியிட்டு உள்ளீர்களா என்பதை பட்டியலிடும் திரானி உங்களுக்கு உள்ளதா...?நடுநிலையாளர்கள் சிந்திக்கவும்.இறுதியாக நாங்களும் தௌஹீதை சொல்கிறோம் என்று கூறும் அருகதயை இழந்து மாதங்கள் பல ஓடி விட்டன.தவ்ஹீத்வாதிகளிடம் உள்ள பண்பையும் இழந்து விட்டர்கள்.நீங்கள் தௌஹீதின் பால் மக்களை அழைக்க வந்தவர்களா...? இல்லை...! தௌஹீதின் பெயரை சொல்லிக்கொண்டு உங்களின் அசிங்கமான செயல்பாடுகளால் அதன் கண்ணியத்தை குலைத்து மக்கள் தவ்ஹீதின்பால் வருவதைத் தடுத்துக்கொண்டிருக்கும் கேவலப்பட்ட ஜென்மங்கள் என்று சத்தியவாதிகள் பேசிக்கொள்கின்றனர்.