Friday, February 18, 2011

சீரழிந்த தமுமுகவின் சீமான் கூட்டணி (?)

தாளம் போடும் தகர டப்பாக்கள்.

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் தமுமுகவின் சுய நல சிந்தனை கொண்ட அரசியல் முறைமை பற்றி ஏற்கனவே நாம் எழுதியிருந்ததை வாசகர்கள் கவணித்திருப்பீர்கள்.

இந்தத் தொடரில் சீமானுடன் கூட்டு சேர்ந்திருக்கும் இந்த மன்மதர்களின் உண்மை முகத்தை இங்கு வெளிக்காட்டளாம் என நினைக்கிறோம்.

இலங்கை முஸ்லீம்களும்,ஆரம்பகால தமுமுகவும்.

தமுமுக வின் ஆரம்பகாலத்தில் இலங்கை முஸ்லீம்களுக்காக தமுமுக அன்றையை நிர்வாகிகள் குரல் கொடுத்தது அனைவரும் அறிந்ததே! 

இந்திய முஸ்லீம்களின் வரலாற்றில் இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினைக்காக முதன் முதலில் குரல் கொடுத்த ஒரு இந்திய இஸ்லாமிய இயக்கம் என்றால் அது ஆரம்பகால தமுமுகவாகத்தான் இருக்க முடியும்.

அன்றைய தமுமுகவின் நிர்வாகத்தில் இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் தான் இருந்தனர் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர;களை சரமாரியாக சுட்டு கொலை செய்தது விடுதலைப் புலிகள் இயக்கம். அந்த இயக்கத்தினருக்கு ஆதரவாக அன்றைய காலகட்டத்தில் இந்திய மற்றும் தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ இயக்கங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன.

அனைவரும் புலிகளுக்கு சாதகமான கருத்துக்களை வெளியிடும் போது தமுமுக என்ற இயக்கம் மாத்திரம் புலிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டது மாத்திரமன்றி குறிப்பிட்ட தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பிட்பட்ட காலத்தில் தமுமுகவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்றை தவ்ஹீத் ஜமாத்தின் நிர;வாகிகள் அனைவரும் அந்த இயக்கத்தை விட்டும் பிரிந்து வந்து ததஜ என்ற தற்போதைய இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அதன் பின் தமுமுகவின் செயல்பாடுகள் படிப்படியாக அரசியல்வாதிகளுக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது.அதன் உச்சகட்டம் இன்று அரசியல் சாக்கடையில் டீ குடிக்கும் நிலைக்கு தமுமுக தள்ளப்பட்டிருக்கிறது.

புலிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய தமிழக முஸ்லிம் இயக்கங்கள்.

வரலாற்றில் தனது தொப்புல் கொடி உறவுகளுக்கு வரலாறு காணாத தவறுகளை செய்த தமிழக முஸ்லிம் இயக்கங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பவையாக தமுமுக,முஸ்லீம் லீக்,பாப்லர் பிரன்ட் ஆப் இந்தியா (எம்.என்.பி) ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இலங்கை முஸ்லீம்களை அவா;களின் சொந்த மண்ணை விட்டும் விரட்டியடித்து,தொழுதுகொண்டிருந்த முஸ்லீம்களை கொலை செய்து பல இஸ்லாமியர;களை வதை செய்து கப்பம் என்ற பெயரில் முஸ்லீம் செல்வந்தர்களின் பணத்தை எல்லாம் பரித்து இலங்கை இஸ்லாமிய சமுதாயத்திற்கே துரோகத்திற்கு மேல் துரோகம் செய்த தீவிரவாத இயக்கமான புலிகள் இயக்கம்,இறுதிக் கட்ட யுத்தத்தில் தோழ்வியடைந்த போது அந்த இயக்கத்திற்கு,தீவிரவாதத்திற்கு ஆதரவாக அரசியல் காரணங்களை முன்நிருத்தி பல அரசியல் கட்சிகளும் போராட்டங்களையும்,பந்த் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது.

இதில் ஆளும் திமுக அரசுடன் அந்நேரத்தில் இணைந்திருந்த தமுமுகவும் இந்தப் போராட்டங்களில் புலிகளுக்கு ஆதரவாக கலந்து கொண்டது.

பாப்லா் ப்ரன்ட்,முஸ்லீம் லீக் போன்றவையும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

முழு இஸ்லாமிய சமுதாயத்தினதும் எதிரி வீழ்த்தப் பட்டிருக்கிறான்,நியாயத்திற்கு காலம் பிறந்திருக்கிறது அந்நேரத்தில் தங்களுடைய வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காக இந்த சமுதாய இயக்கங்கள்(?) அனைத்தும் அவா;களுக்காக குரல் கொடுத்து அன்றே இலங்கை முஸ்லீம்களின் மனதில் கல்லைப் போட்டுவிட்டன.

அதனைத் தொடர;ந்தும் இந்த இயக்கங்கள் தங்கள் பத்திரிக்கைகளிலும்,நிகழ்ச்சிகளிலும் புலிகளுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வந்தனர; இன்றும் அதனை நடைமுறைப்படுத்துவதின் மூலம் வெந்த புன்னில் வேல் பாய்ச்சும் வேலையைப் பார்க்கின்றர்.

சீமான் கூட்டணியும், தமுமுகவின் தொடர் மோசடியும்.

தொடர்சியாக பல துரோகங்களை செய்து வந்த தமுமுக தற்போது தேர்தல் கூட்டணியாக தன்னுடன் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசித்திரிவதினால் பல தடவைகள் கைது செய்யப்பட்ட தமிழக தீவிரவாதியாக பலராலும் வர்ணிக்கப்படும் சீமான் அன்மையில் சிறையிலிருந்து வெளியில் வந்தார;.

தான் சிறையில் இருக்கும் போது தனக்காக குரல் கொடுத்த இயக்கங்களுக்கு நன்றி சொல்வதற்காக வைக்கோ தமுமுக போன்றவர்களை சந்தித்தார் சீமான்.

தமுமுகவுடன் சீமானின் சந்திப்பு நிகழ்ந்த நேரம் சீமானுடைய கருத்துக்களின் ஒன்றிப் போன இந்த சமுதாயத் துரோகிகள் சீமானையும் ஆதரித்து அவர் ஆதரித்த விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது புலிகள் தமது வரலாற்றில் முஸ்லீம்களுக்கு பல துரோகங்களை செய்திருப்பதை சீமான் ஒத்துக் கொண்டதாகவும் அவா்கள் சார்பாக சீமான் தமுமுகவிடம் மண்ணிப்புக் கோரியதாகவும் அதனால் சீமானின் கோரிக்கைக்கு இணங்க விடுதலைப் புலிகள் செய்த அத்தனை துரோகத்தையும் முஸ்லீம்கள் சார்பாக இவா்கள் மண்ணிக்கிறார்களாம். 

மண்ணித்த காரணத்தினால் அவருடன் கூட்டணி வைக்கிறார்களாம்.

இப்படி தமுமுகவின் முக்கிய நிர்வாகிகளான வாத்தியார் ஜவாஹிருல்லாஹ்,ஹைதர் அலி,தமீமுன் அன்சாரி போன்றவா்கள் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் முஸ்லீம்களுக்கு துரோகம் செய்தவர்கள் புலிகள் அவா்கள் இலங்கை முஸ்லீம்களிடம், பாதிக்கப்பட்டவர்களிடம் மண்ணிப்புக் கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் புலிகளை மண்ணித்ததாக அறிவித்தால் அது நியாயம்.

ஆனால் புலிகள் சார்பாக சீமான் மண்ணிப்புக் கேட்பாராம் , இந்த கேடு கெட்ட ஜன்மங்கள் அதற்கு மண்ணிப்புக் கொடுப்பார்களாம்.

கேட்பவன் கேணயன் என்றால் கினற்றிற்குள் திமிங்கிலம் என்பார்களாம்.

வாத்தியார் இந்த லாஜிக்கை எந்தக் கல்லூரியில் படித்தாரோ தெரியவில்லை. 

இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் ஒரு டாக்டர் பட்டம் வேறு.

இலங்கையில் புலிகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களில் ஒருவர் கூட அந்த தீவிரவாதிகளை மண்ணிக்கமாட்டார்கள் ஆனால் இந்த கழிசடைகள் தங்கள் சுய இலாபத்திற்காக வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காக இஸ்லாம் மண்ணிக்கும் படி சொல்கிறதாம் அதனால் புலிகளை மண்ணித்தார்களாம்.

இஸ்லாம் மண்ணிக்கும் படி சொல்கிறது என்பது உண்மை அதனை யார் செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவன் மண்ணிப்பதா? அல்லது தமுமுக போன்ற கழிசடைகள் மண்ணித்தால் போதுமானதா?

பாதிக்கப்பட்டவன் மண்;ணிக்காத வரை இறைவன் மண்ணிக்க மாட்டான் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு இனி எப்படி விடுதலைப் புலிகளின் துரோகத்திற்கு இந்த சமுதாய துரோகிகள் மண்ணிப்பு கொடுப்பது?

உங்கள் சார்பாக விடுதலைப் புலிகளை நாம் மண்ணித்து விட்டோம் என்று அந்த மக்களிடம் வாத்தியாரை வந்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்களாம்.

பாதிப்பை உண்டாக்கிய கருணா அம்மான் (விநாயக மூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் தற்போது இலங்கையில் பாராளுமன்ற அமைச்சராக இருப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னால் கிழக்குத் தளபதி) குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டு அடையாளத்தை மறைக்கும்படியும் அதற்கு தான் நிதியுதவி செய்வதாகவும் தெரிவித்த நேரத்தில் கூட அதனை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவா்களினால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க இந்த சுயநலவாதிகள் எப்படி அவா்களை மண்ணிப்பது? 

மண்ணிப்பதற்கு இந்த வாத்தியாரும் அவருடைய பக்கவாத்தியங்களும் யார்?

மாமனார்களா? மச்சான்களா? மானம் கெட்டவர்கள்.

தமிழக மக்களே உங்களைத் தான்.

தமுமுக என்ற இந்த கேடு கெட்டவர்களின் மாமா கட்சி மீண்டும் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நமது தொப்புல் கொடி உறவுகளான இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் செய்த இந்த சமுதாய துரோகிகளுக்கு இந்தத் தேர்தலிலும் நீங்கள் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

சென்ற தேர்தலில் டெப்பா சீட்டையே இழந்ததைப் போல் இந்தத் தேர்தலிலும் இவா்களை ஓட ஓட விரட்ட வேண்டும். அப்போதாவது இந்த குள்ள நரிகளுக்கு புத்தி தெளிவாகிறதா என்று பார்ப்போம்.

இறைவன் தான் இவா்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.        
நன்றி :RASMIN M.I.Sc
 

No comments:

Post a Comment