Friday, June 4, 2010

"சுன்னத் ஜமாத்தினர் தவிர இங்கு தொழுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை" இது நாம் தொழுகைக்காக செல்லக்கூடிய அனைத்து பள்ளி வாசல்களிலும் காணக்கூடிய ஒரு வாசகம் இது.இங்கு எழக்கூடிய ஒரு சந்தேகம் சுன்னத் ஜமாஅத் யார் என்பதே..!இவ்வாறு சொல்லக்கூடியவர்கலுக்கு இந்த தகுதி உள்ளதா என்று சற்று சிந்தனை செய்பவர்கள் வரக்குடிய ஒரே முடிவு ௦.௦௦% இல்லை என்பதே.இவர்கள் மார்க்கம் என்று செய்யக்கூடிய அனைத்து செயல்களும் வழிகெட்ட ஷியாக்களின் கொள்கைகளை அப்படியே பிரதிபலிக்கும் கொள்கைகளை கொண்டவர்கள்தாம் இந்த கொள்கை பிடிப்புமிக்க இந்த கொள்கை சிங்கங்கள்.இவர்களால் பக்தியோடு செய்யப்படும் பூரியான் பாத்தியா,நாற்பது மற்றும் வருஷ கத்தங்கள்,மவ்லூது,ராத்திபு,பாவத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த தரீக்காக்கள்,முரீது,தட்டு,தாயத்து,ஜின்னை வசப்படுதியதாக விடும் புருடாக்கள்,பேய் ஓட்டும் சடங்குகள் மற்றும் பல அனாச்சாரங்கள் அனைத்தையும் வழிகெட்ட ஷியாக்களிடம் இருந்து இறக்குமதி செய்து விட்டு,குரான் மற்றும் சுன்னா மட்டுமே வாழ்க்கையின் அடிப்படியாக அமைத்துக்கொண்டவர்களுக்கு இவர்கள் தரும் இடையூறு கொஞ்ச நஞ்சமல்ல. .இப்படிப்பட்ட இந்த கொள்கை வாதிகள் தாம் குரானையும்,சுன்னாவையும் மட்டுமே தம் வணக்கவலிபாடுகளிலும்,வாழ்கையின் அனைத்து நிலைகளிலும் அமைத்துக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ்வின் எச்சரிக்கையை தெரிந்தோ,தெரியாமலோ பள்ளியை விட்டு தடுக்கும் மாபெரும் பாவத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.இவர்கள் தாம் "அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாதினராம்"

No comments:

Post a Comment